வைரமுத்து- கவிதைகள். அந்தந்த வயதில்!

June 21, 2024

 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்தக் கவிதை, இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது அறுபதுகளில்…

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..
**
எழுபதுக்கு மேல்…
இந்தியாவில்
இது உபரி..
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ…
ஜன கண மண…


You Might Also Like

0 comments